திண்டுக்கல்

குரூப் 2 தேர்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 12,579 பேர் பங்கேற்பு

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை 12,579 பேர் எழுதினர். 
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2 நிலையில் 1,199 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வுக்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17,353 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனை அடுத்து, திண்டுக்கல் மற்றும் பழனி பகுதியில் 44 இடங்களில் 66 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வினை 17,353 விண்ணப்பதாரர்களில், 12,579 பேர்(72.49 சதவீதம்) மட்டுமே எழுதினர். 4,774 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 66 முதன்மை கண்காணிப்பாளர்கள், 9 நடமாடும் குழு அலுவலர்கள், 12 பறக்கும் படை அலுவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திண்டுக்கல் பகுதியில் தேர்வு நடைபெற்ற மையங்களில் ஆட்சியர் டி.ஜி.வினய் ஆய்வு மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT