ஒய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கொடைக்கானலில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஒய்வூதியர் சங்கம் சார்பில் 10-அம்ச கோரிக்கைகளை

கொடைக்கானலில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஒய்வூதியர் சங்கம் சார்பில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 
கொடைக்கானல் வட்டக்கிளை சார்பில் மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அமல்ராஜ் தலைமை வகித்தார். 
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழை திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1லட்சத்து 50ஆயிரம் வழங்க வேண்டும், ஈமச்சடங்கு நடத்த முன்பணம் ரூ. 25ஆயிரம் வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com