கள்ளிமந்தையம் அருகே கோயிலில் பூஜை பொருள்கள் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கள்ளிமந்தையம் பொருளூர் வரதராஜப் பெருமாள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கள்ளிமந்தையம் பொருளூர் வரதராஜப் பெருமாள் கோயிலில் பூஜை பொருள்கள் திருடு போனது குறித்து  போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளிமந்தையம் பொருளூர் கிராமத்தில் வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. கடந்த நவ-5 ஆம் தேதி பூசாரி பூஜைகள் முடிந்து, இக்கோயிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். 
அதன் பிறகு திரும்ப வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு, கோயிலில் இருந்த மணி, குத்துவிளக்கு, அண்டா, தட்டு மற்றும் மைக் செட் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. 
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை பூசாரி ராமசாமி கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com