ஒட்டன்சத்திரம் கிறித்துவ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட புதுஅத்திக்கோம்பை கிராமத்தில் நவ-10 ஆம் தேதி தொடங்கியது. அதில் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமையன்று டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் நல்லாசிரியர் ஜேக்கப் தாமஸ் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் சீலன் பி.ஸ்டீவன் தொடக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆர்.அரவிந்த ஆண்டவர் மற்றும் ஜே.ஆர்.சி பள்ளியின் என்.சி.சி மற்றும் சாரண சாரணிய இயக்க ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.