ஒட்டன்சத்திரம் பகுதியில் "கஜா' புயல் காரணமாக வீசிய பலத்த காற்றில் மரம் சாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
ஓடைப்பட்டி ஊராட்சி வெங்கடாபுரத்தைச் சேர்ந்த விவசாயி கருப்புச்சாமி (59). இவர் வெள்ளிக்கிழமை அதே ஊரில் உள்ள வேப்பமரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கஜா புயல் காரணமாக பலத்த காற்று வீசியது. அப்போது மரம் சாய்ந்து கருப்புச்சாமி மீது விழுந்தது. அதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதே போல பெரியகரட்டுப்பட்டியில் மரம் விழுந்ததில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான மாடு உயிரிழந்தது.