பழனி அடிவாரத்தில் தனியார் விடுதி அருகே வெள்ளிக்கிழமை சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டுச் சென்றனர்.
இப்பகுதியில் பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புப்படை மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப்படை மற்றும் வனத்துறை வீரர்கள் அந்த பாம்பை பிடித்தனர். அது சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஆகும். இதையடுத்து பிடிபட்ட அந்த பாம்பை வனத்துறையினர் பத்திரமாக ஜீரோ பாயிண்ட் வனப்பகுதியில் உயிருடன் விட்டனர்.