பழனி கல்வி மாவட்ட அளவிலான கேரம், டென்னிஸ் போட்டிகளில் நெய்க்காரப்பட்டி கிரசென்ட் பள்ளி முதலிடம் பெற்றது.
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மாணவர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 14 வயதுக்குள்பட்டோர் இரட்டையர் பிரிவில் கிரசென்ட் பள்ளி மாணவர் ஜெயவிக்னேஷ், தீபக்கும், 17 வயதுக்குள்பட்டோர் ஒற்றையர் பிரிவில் ஆசிக்ராஜாவும், 17 வயதுக்குள்பட்டோர் இரட்டையர் பிரிவில் ஆசிக்ராஜா, ராகுலும், 19 வயதுக்குள்பட்டோர் இரட்டையர் பிரிவில் விக்னேஷ், ஜெயசிவனும் முதலிடம் பெற்றனர்.
மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 17 வயதுக்குள்பட்டோர் இரட்டையர் பிரிவில் இதே பள்ளி மாணவிகள் நர்மதா, ராஜா ராஜேஸ்வரி ஆகியோர் முதலிடம் பெற்றனர். 19 வயதுக்குள்பட்டோர் இரட்டையர் பிரிவில் மாணவிகள் இந்துமதி, ஸ்ரீவர்ஷா ஆகியோர் முதலிடமும், 14 வயதுக்குள்பட்டோர் ஒற்றையர் பிரிவில் மாணவிகள் ஹர்ஷினியும், இரட்டையர் பிரிவில் மாணவிகள் ஹர்ஷினி, மஹதி ஆகியோர் இரண்டாமிடமும் பெற்றனர்.
இதே போல் கேரம் போட்டிகளில்இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மண்டல அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். இந்த மாணவ- மாணவியரை பள்ளித் தாளாளர் சித்ரா ராஜ்குமார், முதல்வர் சாந்தி, அறங்காவலர் ராஜா கெளதம் உள்ளிட்டோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.