கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (செப்.26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, பாச்சலூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, உதவிச் செயற் பொறியாளர் மேத்யூ தெரிவித்துள்ளார்.