திண்டுக்கல்லில் அனுமதியின்றி இயங்கி வந்த மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சமீபத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் மதுபான பார்களை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டறிந்து சீல் வைக்க உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் சனிக்கிழமை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் திண்டுக்கல் அண்ணாசிலை அருகே அனுமதியில்லாமல் டாஸ்மாக் கடை அருகே பார் இயங்கி வந்தது தெரியவந்தது. இந்த பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.