கொடைக்கானலில்  குடியிருப்புப் பகுதியில் தீவிபத்து

கொடைக்கானல் இந்திரா நகர்ப் பகுதியில் சனிக்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர். 


கொடைக்கானல் இந்திரா நகர்ப் பகுதியில் சனிக்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர். 
கொடைக்கானல் இந்திராநகர் கல்லறைமேட்டுப் பகுதியில் திடீரென தீப் பிடித்து எரிந்தது. இதனைத் தொடர்ந்து அப் பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். 
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 
சரியான நேரத்தில் தீயணைப்புத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்ததால் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட  குடியிருப்பு பகுதிகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com