திண்டுக்கல்

வனத் தீயை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஊர்வலம்

DIN


கொடைக்கானலில் வனத்துறையின் சார்பில் வனத்தீயை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஊர்வலம் பேருந்து நிலையத்தில் தொடங்கி அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல், எம்.எம் சாலை வழியாக வனத்துறை அலுவலகத்தை அடைந்தது. இதில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர். 
இதில் வனப் பகுதிகளில் ஏற்படும் தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது, வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் வனத்துறை சரகர்கள் ஆனந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வனத்துறை பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT