ஒட்டன்சத்திரம் நகராட்சி புதிய ஆணையராக, காங்கேயம் நகராட்சியில் பணியாற்றிய பி.தேவிகா நியமிக்கப்பட்டு திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவரிடம் முன்னாள் ஆணையர் எம்.இளவரசன் பொறுப்புகளை ஒப்படைத்தார். இளவரசன் தற்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பொறுப்பேற்றுக் கொண்ட பி.தேவிகா ஒட்டன்சத்திரம் நகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது.