கொடைக்கானலில் அனுமதியில்லாமல் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை காவல் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் கொடைக்கானல் பகுதிகளில் அதிக ஒலிகளை எழுப்பி, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவற்றை அனுமதியின்றி பயன்படுத்திய கொடைக்கானல், அண்ணாநகர், ஆனந்தகிரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களிடமிருந்து 14 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.