பழனி மலைக்கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
பழனி கோயிலில் முன்னர் நடைபெற்ற ஐம்பொன் சிலை முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தியவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல். இவர் ஓய்வு பெற்ற பின்னரும், நீதிமன்ற உத்தரவின்பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் வியாழக்கிழமை மாலை உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் பழனி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய அவரை, கம்பிவட ஊர்தி (ரோப்கார்) நிலையத்தில் சந்திக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றதால், அவர்களைத் தவிர்த்து, மாற்று வழியில் இழுவை ரயில் (வின்ச்) மூலம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.