திண்டுக்கல்

மகளிர் ஹாக்கிப் போட்டி: நாகையக்கோட்டை அரசுப் பள்ளி முதலிடம்

DIN


திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற மகளிர் ஹாக்கிப் போட்டியில், நாகையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. 
 திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள நாகையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான மகளிர் ஹாக்கிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதில், மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன. 
 போட்டியில், நாகையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அணியினர் முதலிடம் பிடித்தனர். வேடசந்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அணி 2ஆம் இடம் பிடித்தது. முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகளுக்கும் வேடசந்தூர் எம்எல்ஏ. பா.பரமசிவம் பரிசு வழங்கினார். 
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் என்.எம்.பி.காஜாமைதீன், மாவட்ட கல்வி அலுவலர் பிச்சைமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT