ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற  சிறுவன் உள்பட 2 பேர் கைது

திண்டுக்கல் அருகே ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற சிறுவன் மற்றும் இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற சிறுவன் மற்றும் இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள வேடப்பட்டியில் கடந்த 4 நாள்களுக்கு முன்னதாக 2 ஏடிஎம் மையங்களை உடைத்து பணம் திருடுவதற்கு 2 பேர் முயற்சித்துள்ளனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பார்த்து கூச்சலிட்டதால், ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற 2 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து, திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஏடிஎம் மையத்தில்  உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், திண்டுக்கல் அடுத்துள்ள யாகப்பன்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (19), வேடப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் பணம் திருட முயற்சித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, கார்த்திகேயன் மற்றும் சிறுவன் இருவரையும்  போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com