திண்டுக்கல் கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்புபயிற்சி நிலையத்தில் மோட்டார் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன.22) முதல் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக பயிற்சி மையத்தின் இயக்குநர் தி. பழனிகுமார் தெரிவித்துள்ளது: பயிற்சி பெற விரும்புவோர், குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 18 முதல் 45 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பத்துடன், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கல்விச் சான்றிதழின் நகல்களை இணைத்து, அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும். பயிற்சி முடித்த பின், வங்கியில் கடனுதவி பெறுவதற்கும் பரிந்துரை செய்யப்படும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் பெற, இயக்குநர், கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், 83 ஏ, முதல் மாடி, ஜான்பால் பள்ளி அருகில், டிஎம்எஸ்எஸ்எஸ் கட்டடம், நேருஜி நகர், திண்டுக்கல் 624001 என்ற முகவரியில் செயல்படும் அலுவலகத்தில் வழங்க வேண்டும். 9940815147, 9442628434, 9843782742, 0451-2434034 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.