ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (26). இவர் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் தனது மனைவி கஸ்தூரி (24) மற்றும் 2 குழந்தைகளுடன் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை பெருமாள்கோயில் வலசு அருகே சென்ற போது, பின்னால் தாராபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.