கன்னிவாடி அருகே இரும்புக்கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரூ.60 ஆயிரம் திருடு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்துள்ள தருமத்துப்பட்டியில் பழைய இரும்புக்கடை வைத்திருப்பவர் சின்னத்துரை (60). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடையில் உள்ள கல்லாப்பெட்டியில் ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை வைத்து விட்டு கடையின் முன்பு தூங்கியுள்ளார்.
பின்னர் திங்கள்கிழமை காலையில் எழுந்து கல்லாப்பெட்டியை பார்த்த போது ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் கன்னிவாடி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.