கொடைக்கானலில் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தப்படாத கடைகளுக்கு, நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
கொடைக்கானலில் நகராட்சிக்குச் சொந்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை, மூஞ்சிக்கல் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளன. இவற்றில் ஏராளமான கடைகளுக்கு பல மாதங்களாக வாடகை செலுத்தப்படவில்லையாம்.
எனவே, நகராட்சி ஆணையர் முருகேசன் உத்தரவின்பேரில், வருவாய் ஆய்வாளர் சரவணன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை 10-க்கும் மேற்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.