மதுரை ஆனையூர் ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் செந்தில் சேகரன்(34). மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் திங்கள்கிழமை இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கியுள்ளார். அப்போது வீட்டின் பின்கதவை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.1.30 லட்சத்தை திருடிச்சென்றனர்.
காலையில் செந்தில் சேகரன் எழுந்து பார்த்தபோது திருட்டு நடந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து கூடல்புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.