திருநகரை அடுத்த பாண்டியன் நகர் பூங்காவில் பாரதியார் பிறந்த நாளையொட்டி பல்வேறு அமைப்பினைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திருநகரை அடுத்த பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாண்டியன் நகர் பூங்காவில் உள்ள பாரதியார் சிலைக்கு சங்கத் தலைவர் வ.சண்முக சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் பொன்.மனோகரன், லட்சுமணகுமார், குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாம்தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஒன்றியச் செயலர் மருதமுத்து, மாவட்ட ஆலோசகர் ஆறுமுகம், இளைஞர் பாசறை செயலர் வடிவேல், கரிகாலன் உள்ளிட்டோர் பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எஸ்.ஆர்.வி.மக்கள் நல மன்றம் சார்பில் மன்றப் பொருளாளர் அண்ணாமலை தலைமையில் மன்றத் தலைவர் ஜியஅய்யல்ராஜ் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் மன்ற செயலர் ஜி.காளிதாஸ், துணைத் தலைவர் குலசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.