மதுரை அருகே மோட்டாரை பழுது நீக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
மதுரை அருகே கல்லம்பலைச் சேர்ந்தவர் மாயழகன் (56). இவர் கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரில் பழுதை நீக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த மாயழகனை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாயழகன் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். சம்பவம் தொடர்பாக அவரது மனைவி பாக்கியலட்சுமி(54) அளித்தப் புகாரின் பேரில் சிலைமான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.