ரயில்வே கட்டணமில்லா வருமானத்தை பெருக்குவது தொடர்பான ஒப்பந்ததாரர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரயில் கட்டணம் இல்லா வருமானத்தைப் பெருக்குவதற்கு அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் ரயில்வே வாரியம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரைக் கோட்டத்தில் ரயில் கட்டணமில்லா வருமானத்தை பெருக்க ஏற்கனவே மதுரை வாழ் வணிக பிரமுகர்கள், ஆர்வலர்கள் ஆகியோருடன் கூட்டங்கள் நடைபெற்றன. இதன்மூலம் சுமார் 4.5 கோடி மதிப்புள்ள 12 ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டுள்ளன. இதற்கான முன் ஒப்பந்தக் கூட்டம் நவ.20 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான முன்னோட்டமாக ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பித்த ஒப்பந்ததாரர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் இ.ஹரி கிருஷ்ணன், வணிக மேலாளர் பரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஒப்பந்ததாரருக்கு ஆலோசனைகளையும் விளக்கங்களையும் வழங்கினார்கள்.