திருப்பரங்குன்றத்தை அடுத்த ஆஸ்டின்பட்டியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மதுரை மாடகுளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மாணிக்கராஜ் (33). இவர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். இந்நிலையில் விளாச்சேரி மந்தைத்திடலில் சுப்பிரமணி என்பவர் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்துவிட்டாராம்.
அவரை ஆம்புலஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு புறப்பட்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடிபோதையில் தகறாறில் ஈடுபட்டு மாணிக்கராஜை தாக்கினாராம்.
இதுதொடர்பா மாணிக்கராஜ் அளித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.