மதுரை மாவட்டம், மேலூர் அருகே மலம்பட்டி பகுதியிலுள்ள மணிமுத்தாறில் மணல் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கீழவளவு போலீஸார் கைது செய்து, மணல் ஏற்றிய வேனையும் பறிமுதல் செய்தனர்.
வேன் மூலம் மணிமுத்தாறில் மணல் திருடப்படுவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, கீழவளவு காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் வீரணன் மற்றும் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று கண்காணித்தனர். அப்போது, ஆற்றுக்குள் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜா (52), கம்பர்மலைப்பட்டியைச் சேர்ந்த சேவற்கொடியோன் (42), கீழவளவைச் சேர்ந்த அழகு (40), சந்திரன் (60), பூமிநாதன் (34) மற்றும் லெட்சுமணன் (60) ஆகிய 6 பேரையும் போலீஸார் கைது செய்து, மணல் ஏற்றிய வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.