மின்சாரத்தை தவறான வீதப் பட்டியலில் பயன்படுத்திய மின்நுகர்வோருக்கு ரூ. 61 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை பெருநகர் மின்பகிர்மான வட்டம் வடக்கு செயற்பொறியாளர் ஜீ. மலர்விழி தலைமையில், கோ.புதூர் மின்பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. வடக்கு கோட்டத்துக்குள்பட்ட 12 மின்பொறியாளர்கள் அடங்கிய குழுவினர், 358 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனர். இதில், தவறான வீதப் பட்டியலில் மின்சாரத்தைப் பயன்படுத்திய நுகர்வோருக்கு ரூ. 61,487 அபராதம் விதிக்கப்பட்டது.