மனைவி தற்கொலை: கணவர், மாமியார் கைது

திருமங்கலத்தில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர் மற்றும் மாமியாரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.


திருமங்கலத்தில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர் மற்றும் மாமியாரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 19 நாள்களுக்கு முன் மீனாவிற்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மணிகண்டன் வீட்டிற்கு வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்ததாம். கதவை உடைத்து பார்த்த போது மீனா தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து மீனாவின் தந்தை திருமங்கலம் நகர் போலீஸாரிடம் தனது மகள் இரண்டு பெண் குழந்தை பெற்றதால் அவரது கணவரும், மாமியார் பாக்கியலெட்சுமியும் தனது மகளை துன்புறுத்தினர். அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மற்றும் அவரது தாயார் பாக்கியலெட்சுமி ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com