மதுரை
பாஜக நிர்வாகி மீது காவல் ஆணையரிடம் புகார்
சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், மாநகரக்காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மாவட்ட செயலர் இத்ரிஸ் தலைமையிலான நிர்வாகிகள், மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் அளித்தனர். அதில் முகநூலில், முகமது நபிகள் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
மேலும் அந்த முகநூல் பக்கங்களையும் முடக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.