மதுரை மாவட்டம் திருமங்கலம், கப்பலூர் பகுதிகளில் வரும் சனிக்கிழமை (அக்.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திருமங்கலம் செயற்பொறியாளர் வி.ரமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருமங்கலம் துணை மின்நிலையத்தில் வரும் சனிக்கிழமை (அக்.20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
பணிகளால் குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: திருமங்கலம் நகர் பகுதிகள், உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.
கப்பலூர் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (அக்.20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: கப்பலூர், தியாகராஜர் மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லைநகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம்,கரடிக்கல் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.