திருமங்கலம், கப்பலூர் பகுதிகளில் அக்.20 இல் மின்தடை

மதுரை மாவட்டம் திருமங்கலம், கப்பலூர் பகுதிகளில் வரும் சனிக்கிழமை (அக்.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம், கப்பலூர் பகுதிகளில் வரும் சனிக்கிழமை (அக்.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திருமங்கலம் செயற்பொறியாளர் வி.ரமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  திருமங்கலம் துணை மின்நிலையத்தில் வரும் சனிக்கிழமை (அக்.20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. 
பணிகளால் குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: திருமங்கலம் நகர் பகுதிகள், உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.
  கப்பலூர் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (அக்.20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. 
 பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: கப்பலூர், தியாகராஜர் மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லைநகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம்,கரடிக்கல் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com