மதுரை மதிச்சியம் பகுதியில் வைகையாற்றில் மூழ்கியவர் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(48). இவர் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் வைகையாற்றில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கினார். இவரை உறவினர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தெப்பக்குளம் பகுதியில் பிடிஆர் பாலம் அருகே வைகையாற்றில் தியாகராஜன் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மதிச்சியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.