உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் தேசிய மாணவர் படை மற்றும் சமூக கல்வித் திட்டம்(அரைஸ்)இணைந்து தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணியை புதன்கிழமை நடத்தின.
கல்லூரியின் முதல்வர் பேசில் சேவியர் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி கல்லூரியிலிருந்து கருமாத்தூர் கரிசல்பட்டி வரை சென்றடைந்தது. பின்னர் கரிசல்பட்டி கிராமத்தை தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் தூய்மைப்படுத்தினர். மேலும் திண்டுக்கல் பட்டாலியன் ஹவில்தார் வெங்கடேஷ் , ராஜ்பகதூர் யாதவ் மற்றும் உசிலம்பட்டி தேசிய மாணவர் படை அதிகாரி ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளை ஊக்கப்படுத்தினர். முன்னதாக அரைஸ் விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் நிர்மல் ராஜ்குமார் வரவேற்றார். தேசிய மாணவர் படை அதிகாரி ஆரோக்கிய மரிய மைக்கேல் ராஜா நன்றி கூறினார்.