மதுரை

கலைத்திறன் போட்டிகளில் குயின்மீராசர்வதேசப் பள்ளி தொடர் வெற்றி

DIN

மதுரையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகளில் குயின்மீரா சர்வதேசப் பள்ளி 9 பிரிவுகளில் வெற்றி பெற்று முதலிடம் வகித்துள்ளது. 
மதுரையில் தனியார் வானொலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து  நடத்திய போட்டிகளில்  125 பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 13 போட்டிகள் நடைபெற்றன. இதில் 9 பிரிவுகளில் மதுரை குயின்மீரா சர்வதேசப் பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்று அதிகப் புள்ளிகளையும் பெற்று  முதலிடம் வகித்தது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்த போட்டிகளிலும் குயின்மீரா சர்வதேசப் பள்ளி அணியானது தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் வகித்த குயின்மீரா சர்வதேசப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை கிடைத்தது. அதனை மதுரை மாநகராட்சிப் பள்ளிகளின் கட்டமைப்பு வளர்ச்சி நிதிக்கு அன்பளிப்பாக குயின்மீரா சர்வதேசப் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. தொடர் வெற்றி பெற்ற அணியினரை குயின்மீரா சர்வதேசப்பள்ளியின் தலைவர் சந்திரன், இளம் கல்வியாளரான இயக்குநர் அபிநாத் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT