கொட்டாம்பட்டி அருகே தேத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள கருப்பணசுவாமி கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீண்டகாலத்துக்குப் பின்னர் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 16 காளைகள் பங்கேற்றன. சிறந்த காளைகளுக்கும், காளைகளைப் பிடிக்க முயன்ற வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகளைப் பிடிக்க முயன்றதில் 9 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திடல் அருகிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.