திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.1.17 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ரூ.1.17 கோடியில்  நலத்திட்ட உதவிகளை

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ரூ.1.17 கோடியில்  நலத்திட்ட உதவிகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். 
     தனக்கன்குளம், நிலையூர் கைத்தறி நகர், சூரக்குளம், வளையபட்டி, வளையங்குளம் ஆகிய கிராமங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், சரவணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பனாளிகளுக்கு ரூ.1.17 கோடிக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 
   149 பேருக்கு இலவச வீட்டு மனைபட்டா, 109 பேருக்கு  முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 397 பேருக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்து  79 ஆயிரத்து 683-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  
   நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் வரவேற்றார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ம.முத்துராமலிங்கம், அரசு வழக்குரைஞர் எம்.ரமேஷ், முன்னாள் வாரிய தலைவர் பூமிபாலகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் நிலையூர் முருகன், பாலமுருகன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.முனியாண்டி, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com