ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படுகிறது என தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியது சரியல்ல. அவர் தன் மனதில் தோன்றியதை கூறியுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படுகிறது. அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அவற்றை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஆலையைமூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தாமிரவருணி புஷ்கரணி விழா குறித்து ஆலோசனை செய்யப்படும். 18 சட்டப் பேரவை உறுப்பினர்கள் தீர்ப்பு பற்றி அமமுக துணைபொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறியது அவரது சொந்த கருத்து. அது குறித்து பதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.