மதுரை

"ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு முறையாக செயல்படுகிறது'

DIN

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படுகிறது என தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
     சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: 
  ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியது சரியல்ல. அவர் தன் மனதில் தோன்றியதை கூறியுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படுகிறது. அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அவற்றை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஆலையைமூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தாமிரவருணி புஷ்கரணி விழா குறித்து ஆலோசனை செய்யப்படும். 18 சட்டப் பேரவை உறுப்பினர்கள் தீர்ப்பு பற்றி அமமுக துணைபொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறியது அவரது சொந்த கருத்து. அது குறித்து பதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT