மக்களை திசை திருப்பும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

தமிழக அரசின் சாதனைகளை இருட்டடிப்பு செய்ய மக்களை திசை திருப்பும் வகையில் திமுக தலைவர்

தமிழக அரசின் சாதனைகளை இருட்டடிப்பு செய்ய மக்களை திசை திருப்பும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.  
 திருப்பரங்குன்றம் பூங்கா அருகே அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டச் செயலர் கோபால் தலைமை வகித்தார். 
கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்று பேசியது :திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் அதிமுகவிற்கு முக்கியமானது. இத்தேர்தலில் யார் வெற்றி பெறப்போகின்றனர் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம், கண்மாய்களில் குடிமராமத்து பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக  அரசின் சாதனைகளை இருட்டடிப்பு செய்ய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். அதுமக்களிடம் எடுபடவில்லை. 
அதனால் தற்போது அமைச்சர்கள் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து மக்களை திசைதிருப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார். திமுகவின் கொள்கை பரப்பு செயலர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் ஊழலுக்காக திகார் ஜெயிலில் இருந்தவர்கள். திமுக ஆட்சி தமிழகத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்டது. 
இதுகுறித்து மக்களிடம் நாம் திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். 
அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டர்களும் தலைவராக முடியும். அப்படித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தலைவரானார்கள். எனவே அனைவரும் உண்மையாக உழைத்தால் உங்களைத்தேடி பதவி வரும் என்றார்.  
கூட்டத்தில் வழக்குரைஞர் சேகர், நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், எம்.எஸ்.பாண்டியன், ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com