சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸை கைது செய்ததை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை உசிலம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 11பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முக்குலத்தோர் புலிப்படையினர் கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மறியலில் ஈடுபட்ட புலிப்படை கட்சியைச் சேர்ந்த மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் திரவியம் தலைமையிலான 11பேரை உசிலம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.