திருவாதவூர் பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா

மேலூர் அருகே திருவாதவூரில் அமைந்துள்ள திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் கோயிலை ஒட்டியுள்ள பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.


மேலூர் அருகே திருவாதவூரில் அமைந்துள்ள திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் கோயிலை ஒட்டியுள்ள பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், இந்த ஆண்டு பெரிய கண்ôயில் நீர் நிரம்பி இருந்தது. இதனால், அதிக அளவில் மீன்கள் வளர்ந்திருந்தன. 
தற்போது, நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாலும், கண்மாயில் தண்ணீர் அளவு குறைந்துவிட்டதாலும், கண்மாய் சனிக்கிழமை அழியவிடப்படும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திருவாதவூர், இடையபட்டி, ஆமூர், கோவில்பட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கண்மாய்க்குள் வலைகளுடன் இறங்கி மீன் பிடிக்க குவிந்தனர். அதில், கட்லா, ரோகு, நாட்டுக் கெண்டை, விறால் வகை மீன்கள் அதிகம் பிடிபட்டன. சிலரது வலையில் பெரிய மீன்களும் சிக்கின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com