தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து திருப்பரங்குன்றத்தில் மதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில கொள்கை பரப்புச் செயலர் அழகுசுந்தரம், பகுதிச் செயலர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டச் செயலர்கள் பாண்டி, அழகர், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.