நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும் இசைக் கருவிகள், ஆடை, ஆபரணங்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 2017-2018 ஆம் ஆண்டுக்கான இலவச இசைக் கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வழங்கப்பட உள்ளன.
நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்கள், இசைக் கருவிகள், ஆடை, ஆபரணங்களைப் பெற உதவி இயக்குநர், மண்டலக் கலைப் பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, தல்லாகுளம், மதுரை என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.