ரூ.4.5 லட்சம் தங்க நகைகள் திருட்டு

மதுரையில் மெருகுப் போடும் கடையின் ஊழியர், மெருகுப் போடுவதற்காக கடையில் வைக்கப்பட்டிருந்த

மதுரையில் மெருகுப் போடும் கடையின் ஊழியர், மெருகுப் போடுவதற்காக கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை திங்கள்கிழமை திருடிச் சென்றார். 
மேற்கு வங்க மாநிலம் பர்கானா மாவட்டம் துர்காபூரை சேர்ந்தவர் சபிக்குல் (30). இவர் மதுரை தெற்கு மாசி வீதி பச்சரிக்காரத் தெருவில் தங்க நகைகளுக்கு மெருகுபோடும் கடை  நடத்தி வருகிறார். 
இவரிடம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது அஹத் ஹாசி(19)  என்பவர் அண்மையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில்,  கடையில் வேலை செய்யும் மற்றொருவரான இதீரீஸ் சர்தார் என்பவரைக் காபி வாங்கி வரச் சொல்லி வெளியில் அனுப்பிவிட்டு, மெருகுப் போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த  ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள சுமார் 400 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டார்.  
இதுகுறித்து சபிக்குல் கொடுத்த புகாரின்பேரில் தெற்குவாசல் போலீஸார் முகமது அஹத் ஹாசி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com