உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார்.
உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் நீதிபதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ரவீந்திரநாத்குமார் கலந்து கொண்டார். மேலும் இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தவசி, முத்துராமலிங்கம், பாண்டியம்மாள், நகரச் செயலர் பூமாராஜா, செல்லம்பட்டி ஒன்றிய அவைத் தலைவர் பண்பாளன், சேடபட்டி ஒன்றிய நிர்வாகி சிவன்ராம், எழுமலை பேரூர் நிர்வாகிகள் வாசிமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.