அதிமுக இளைஞரணி மற்றும் இலக்கிய அணி சார்பில் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 550 மாணவர்களுக்கு தேர்வுக்கான கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இளைஞரணி மாவட்டச் செயலர் எம்.ரமேஷ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துக்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் முனியாண்டி, ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன், துணைச் செயலர் நிலையூர் முருகன், இலக்கிய அணிச் செயலர் ப.மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியர்(பொறுப்பு)கல்யாணி வரவேற்றார்.