மதுரை அய்யர்பங்களா பி.எஸ்.ஒய். கிட்ஸ் கேரேஜ் மழலையர் பள்ளியில் முதியோர் இல்லத்தினர் பங்கேற்ற பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முதியோரின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செல்லூரில் உள்ள நகர்ப்புற வீடற்ற ஏழைகள் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
பொங்கல் விழாவையொட்டி பள்ளிக் குழந்தைகள் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளை, முதியோர்கள் கண்டுகளித்தனர். பள்ளி முதல்வர் பரிதா பானு மற்றும் ஆசிரியைகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.