மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகையாற்றில் மூழ்கி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டியைச் சேர்ந்தவர் நைனார் முகமது(44). இவர் அம்மச்சியாபுரம் பகுதியில் வைகையாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அவரது தாய் பவுசியாபேகம் அளித்தப் புகாரின்பேரில் சோழவந்தான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.