ஆனையூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜன.19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் பகிர்மானக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை, கூடல் நகரில் அமைந்துள்ள ஆனையூர் உபமின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தினமணி நகர், கரிசல் குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், விஎம்டபிள்யூ காலனி, ரயிலார் நகர், சொக்கலிங்க நகர், கூடல் நகர் 1 முதல் 13ஆம் தெரு, அகில இந்திய வானொலி நிலைய பிரதான சாலை, செல்லையா நகர் முழுவதும், ஆனையூர், ஜேஜே நகர், சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்காபுரம், வாகைகுளம், சிக்கந்தர்சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லெட்சுமிபுரம், மிளகரணை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.