மதுரை

ஆடையில் தீப்பற்றி பெண் சாவு

DIN


மதுரையில் சமையல் செய்யும்போது, ஆடையில் தீப்பற்றியதில் காயமடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை வண்டியூர் மாந்தோப்பு பகுதியில் உள்ள காமராஜன் 2 ஆவது தெருவைச் சேர்ந்த பாண்டி மனைவி பேச்சி (39). இவர், கடந்த 16-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அடுப்பின் அருகில் இருந்த மண்ணெண்ணெய் தவறி விழுந்து பேச்சியின் சேலையில் கொட்டியதால், உடனே தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது.
பேச்சியின் அலறல் கேட்டு வந்த குடும்பத்தினர்அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், பேச்சி சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் ராஜபாண்டி அளித்த புகாரின்பேரில், அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT