முதுகுளத்தூர் அருகே பெண் வெட்டிக் கொலை

முதுகுளத்தூர் அருகே இளம்பெண்ணை மர்ம நபர்கள் சனிக்கிழமை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.


முதுகுளத்தூர் அருகே இளம்பெண்ணை மர்ம நபர்கள் சனிக்கிழமை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
முதுகுளத்தூர்அருகே உள்ள கிடாத்திருக்கை கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் மகள் குருவம்மாள் (34). இவருக்கு திருமணமாகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், குழந்தை எதுவும் இல்லாததால், தாயுடன் கிடாத்திருக்கை கிராமத்தில் வசித்து வந்தார். அருகில் உள்ள கொண்டுலாவி கிராமத்தில் குருவம்மாள் விவசாய வேலைக்கு சென்று வந்தார். அப்போது வயலில் களை எடுத்து கொண்டிருந்தபோது மர்மநபர்கள் குருவம்மாளை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து பேரையூர் காவல் நிலையத்தில் குருவம்மாளின் உறவினர் அளித்த புகாரின்பேரில் முதுகுளத்தூர் டி.எஸ்.பி.,உதயசூரியன், காவல் ஆய்வாளர் ஜோக்கிம் ஜெரி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர், இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து குருவம்மாளின் கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com