விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை

திருவாடானை அருகே விஷம் குடித்த பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.


திருவாடானை அருகே விஷம் குடித்த பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருப்பாலைக்குடி அருகே உப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (45). இவரது மகள் துர்கா (14) உப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவர் அடிக்கடி தொலைக்காட்சி பார்ப்பதாக அவரது தாய் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த துர்கா புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு துர்கா வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து அவரது தந்தை குமார் அளித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com